சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதால், பாகிஸ்தான் அணியை பாராட்டினார் விரேந்தர் சேவாக்.
Congratulations Pakistan on a really comprehensive victory today. Well played, deserved winners and a great result for Pakistan cricket.
— Virender Sehwag (@virendersehwag) June 18, 2017
முன்னதாக பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி இந்தியா வெற்றி பெறும் என முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக் கூறியிருந்தார், ஆனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் 180 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது பாகிஸ்தான்.
ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் விளையாடி கொண்டிருக்கும் போது, இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், சிறிது நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல், இரண்டு வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஹர்டிக் பாண்டியா பொரித்து கொண்டிருக்கும் போது, இந்திய ரசிகர்களுக்கு இரண்டாவது முறை நம்பிக்கை வந்தது. ஆனால், ஜடேஜாவால் அவர் ரன்-அவுட் ஆக, அடுத்த வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் 8வது அணியாக களமிறங்கிய பாகிஸ்தான், சிறப்பாக விளையாடி, கோப்பையை வென்று அசத்தியது. அனுபவம் உள்ள அஹ்மத் ஷேஷாதை தூக்கிவிட்டு இளம் வீரரான பக்கர் ஜமானுக்கு வாய்ப்பு கொடுத்தனர்.