காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து டுவைன் பிராவோ விலகியுள்ளார்.
பத்தாவது ஐபிலில் குஜராத் லியன்ஸுக்காக தேர்வாகியுள்ள மேற்கிந்திய ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தசைப்பிடிப்பு காரணமாக ஐபில் தொடரில் இருந்தே விலகுகிறார். இன்று பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் டாஸின் போது குஜராத் லயன்ஸ் கேப்டன் சுரேஷ் ரெய்னா இதனை உறுதி படுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிக் பேஷ் லீக் விளையாடும் போது, அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சில மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இதனால் அவர் இந்த தொடரில் ஒரு போட்டி கூட குஜராத்துக்காக விளையாட வில்லை.
இந்நிலையில் அவர் தசைப்பிடிப்பில் இருந்து மீளாததால் இந்த ஐபில் தொடரில் இருந்தே விலகுவதாக கூறியுள்ளார். குஜராத் லயன்ஸ் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருக்கும் பொழுது, இவரது விலகல் குஜராத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.