சிஸ்கே தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ப்ளெம்மிங் நியமனம்!!
சூதாட்ட புகார் எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2016,2017) ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.
தடை முடிந்து ஐ.பி.எல் களத்துக்குத் திரும்பியுள்ள சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர்.
தோனி, அஷ்வின் ஆகியோர் புனே அணிக்காகவும் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம் போன்றோர் குஜராத் அணிக்காகவும் ஆடினர்.
இவர்களில் எந்த வீரரை சிஎஸ்கே தக்க வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தச் சூழ்நிலையில், ஐ.பி.எல். அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா
கடந்த பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீபன் ப்ளெம்மிங் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் ப்ளெம்மிங் 2009ஆம்ஆண்டு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளாக நியமிக்கப்பட்டர்.
2015ஆம் அம்மது சென்னை அணி 2 வருடம் தடை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஐ.பி.எல் தொடரில் நுழைந்துள்ள சென்னை அணிக்கு ஸ்டீபன் ப்ளெம்மிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.