இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க போட்டி தேதியை அறிவித்தது பி.சி.சி.ஐ.,
இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி ஜூன் 14ம் தேதி பெங்களூரில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் முதன்மையான அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. டெஸ்ட் அந்தஸ்த்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியுடன் இருந்து தனது டெஸ்ட் பயணத்தை தொடங்க காத்திருக்கிறது.
இந்த வருடம் இந்திய அணிக்கு அதிக வெளிநாட்டு போட்டிகள் உள்ள சமயத்தில் வரும் ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் இந்தியாவில் வந்த ஆபகானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி இந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்துகிறோம் என அழைப்பு விடுத்தது. ஆனால் இந்தியாவின் அழைப்பை ஏற்று தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு வந்த விளையாட சம்மமதம் தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடர் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் என்று பி.சி.சி.ஐ., இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போட்டி குறித்து இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பி.சி.சி.ஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் இளம் வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து முகமது நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடரில் பங்கேற்றனர். அடுத்த தொடரில் பங்கேற்க 13 வீரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.