வலைபயிற்சியில் பந்து வீசுவதற்காக தாகூர், மற்றும் சைனி தென்னாப்பிரிக்கா பயணம்!! 1

வலைபயிற்சியில் பந்து வீசுவதற்காக தாகூர், மற்றும் சைனி தென்னாப்பிரிக்கா பயணம்!!

ரஞ்சி கோப்பையில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரதுல் தாகூர் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியில் பந்து வீச தென்னாப்பிரிக்க தென்னாப்பிரிக்கா பயணம் செய்ய உள்ளனர்.

வலைபயிற்சியில் பந்து வீசுவதற்காக தாகூர், மற்றும் சைனி தென்னாப்பிரிக்கா பயணம்!! 2
ரஞ்சி கோப்பை தகுர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்தது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

287 ரன்கள் இலக்கு

28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 258 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.வலைபயிற்சியில் பந்து வீசுவதற்காக தாகூர், மற்றும் சைனி தென்னாப்பிரிக்கா பயணம்!! 3

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். புஜாரா 11 ரன்னுடனும், பார்த்தீவ் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடரை கைப்பற்றியது

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் லுன்ஜி நிகிடி 6 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற நிகிடி அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.Cricket, India, South Africa,

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *