மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாட ஹார்டிக் பாண்டியா தயாராக உள்ளார் : பயிற்சியாளர் 1
Indian cricketer Hardik Pandya takes part in a practice session at Galle International Cricket Stadium in Galle on July 24, 2017. India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

இலங்கை அணியுடன் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே வீரர்கள் உடன் விளையாடும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி நல்ல துவக்கத்தை கொடுத்தது ஆனால் நடுநிலையில் உள்ள வீரர்கள் சரியாக விளையாடாததால் 23 ரங்களுக்கு 7 விக்கெட்களை இந்தியா பறி கொடுத்தது.

இதனால் அடுத்த பொடியில் வீரர்களை மாற்றி அமைக்க போவதாக கூறினார்கள் ஆனால் தற்போது அது இல்லை என்று கூறிவிட்டார்கள்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பல்லேகலேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்கள் எடுத்தது. போட்டியின் இடைவேளையின்போது மழை பெய்ததால் இந்திய அணியின் வெற்றிக்கு 47 ஓவர்கள் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டியில் டோனி மற்றும் புவேனஸ்வர் குமார் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது இலங்கை அணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலங்கை அணியால் பந்து வீச முடியவில்லை. மூன்று ஓவர்கள் குறையாக வீசியது போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கண்டுபிடித்தார்.

ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது இலங்கை அணி மெதுவாக பந்து வீசியிருந்தது. மூன்று மாதத்திற்குள் மேலும் ஒருமுறை இவ்வாறு செய்ததால் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 33-வது ஓவரில் டோனி அடித்த பந்தை குணதிலகா பாய்ந்து பிடிக்க முயன்றார். அப்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, தரங்கா மற்றும் குணதிலகா ஆகியோருக்குப் பதிலாக சண்டிமல் மற்றும் திரிமன்னே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தரங்காவிற்குப் பதிலாக சமரா கபுகேதரா கேப்டனாக பணியாற்றுவார்.

தற்போது இந்தியா இலங்கை அணிகள் விளையாடி வருகிறது இதில் மூன்று டெஸ்ட் பொடிகள் கொண்ட தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை படு தோல்வி அடைய செய்தது.

தற்போது இரண்டு அணிகளும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது இதில் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *