இந்திய கேப்டன் மீது நிறவெறித்தாக்குதல் : திருந்தாத வட இந்தியர்கள்!

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை இன்ஸ்டாகிராமில் ஒருவர் இனவெறி கருத்தால் தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்தியக் கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடினார். இந்த உரையாடலில் பல்வேறு விஷயங்களைக் கோலி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னுடைய இளமைக்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் தன்னுடைய தந்தை குறித்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது இன்ஸ்டாவில் இருக்கும் கமெண்ட் பாக்சில் […]