பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய விமர்சகர் கமால் ரஷீத் கான் (கே.ஆர்.கே) அனைத்து தவறான காரணங்களுக்காகவும் கவனத்தைத் திசைதிருப்ப விரும்பியதாக தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோஹ்லிக்கு எதிராக சமூக ஊடகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார். இப்போது அவர் மேலும் புருவங்களை உயர்த்தக் கூடிய ஒரு வீடியோவுடன் வந்துள்ளார்.
நடந்து முடிந்த சாம்பியன் ட்ரோபியில் இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தன் வாச படுத்தியது.
இந்த இறுதி போட்டி ஒரு சூதாட்டம் என அவர் குற்றம்சாட்டி உள்ளார் :
” பாகிஸ்தானை ஒரு பக்கத்திலிருந்து இறுதிப் போட்டியில் கொண்டு வந்தனர், மற்றொன்றில் இருந்து இந்தியா வந்தது,எனவே இந்த போட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டது.இறுதி நாளில் பாகிஸ்தான் தகுதி தகுதி பெற்றது.பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு, இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் என்று நான் ஏற்க்கனவே சொன்னேன் “
“ஐசிசி தரவரிசையில் 8வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை விட இந்தியா வலிமைவாய்ந்தது பிறகு இந்தியா எவ்வாறு தோல்வி அடைந்து இருக்கும்” என்று கேஆர்கே கூறினார்.
கிரிக்கெட் விளையாடுவதற்கு கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பிசிசிஐ மற்றும் ஐ.சி.சி ஆகியவை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகும் என்று அவர் கூறினார்.
விடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும் :