இந்திய கிரிகெட் கட்டுப் பாட்டு வாரியம் இரண்டே நாட்களில் கலந்தாய்வு செய்து இல்ங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளது. மேலும் இரு வைகையிளான போட்டிகளுக்கும் புதிய கேப்டனை நியமிக்கப் போவதாக தெரிகிறது. ரோஹித் ஷர்மாவிற்க்கு வாய்ப்புகள் அதிகம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது . நான்காவது நாளிலே இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது .
முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் குவித்து, இரண்டாம் இன்னிங்ஸ் பந்து வீச்சில் 5 விக்கெட் என மொத்தம் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரும் 12 ஆம் தேதி மூறாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர் நடக்கப் போகும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியயை அறிவிக்க மும்மூரம் காடி வருகிறது இந்திய கிரிகெட் கடட்டுப் பாட்டு வாரியம்.
மேலும் விராட் கோலி கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் முதல் அனைத்து இந்திய போட்டிகளிலிம் ஓய்வில்லாமல் விளியாடி வரும் அவருக்கு சிறிது ஓய்வு கொடுக்க னிதிய கிரிகெட் கட்டுப் பாட்டு வாரியம் முடிவ்ர்டுத்துள்ளதாக தெரிகிரது.
கடந்த வருடம் 43 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியில் ஒரு போட்டிகல் பொக மீதம் உள்ள 42 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தர்மசாலவில் நடந்த ஒரே ஒரு போட்டியை தோல் பட்டை காயம் காரணமாக தவர விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது. அது போக 18 டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடியுள்ளார்.
இந்த வருட இறுதியில் அடுத்தடுத்து 23 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு அவரது சேவை தேவை என்பதாலும் இந்த கால கட்டங்களில் காயம் ஏற்ப்பட்டு விட கூடாது என்பதற்க்காகவும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்திய மண்ணில் ஆஸ்திரலியா,இலங்கை,நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் 3 டெஸ்ட், 13 ஒரு நாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளியாடவுள்ளது குற்ப்பிடத்த்க்கது. அதன்ன் பின்னர் தென்னப்பிரிக்க பயணம் செய்யும் இந்திய அணி அங்க ஒரு முழு அளவிலான தொடரில் விளையாட உள்ளது.
என்வே தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் குழுவினர் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் மிக மோசமாக விளையாடி வரும் இலங்கை அணியுடனான ஒரு நால் தொடரில் கோலி இல்லாமல் கூட இந்திய அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும் கூட அவருகு ஓய்வு எடுக்க அனுமதி கொடுக்க முடிவு செய்ப்பபடலாம். சமீபத்தில் தான் இல்ங்கை அணி சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியுடம் ஒரு டெஸ்ட் தொடரை இழந்ததும் குறிப்பிடத்த்க்கது.
விராத் கோலிக்கு பதிலாக அஜிங்க்யா ரகானே அல்லது ரோஹித் சர்மாவிற்க்கு இந்திய அணியை தலைமை தாங்க கேப்டன்சிப் வழங்கப்படலாம். ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்த்க்கது.