இவனுகள எதுக்கு எடுத்தாங்கனு தெரியலயே; சம்பந்தமே இல்லாமல் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூன்று வீரர்கள் !! 1

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சம்பந்தமே இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஜூலை மாதம் இலங்கை செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இலங்கை தொடர் நடைபெறும் அதே நேரத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதால், இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய இளம் படை செல்ல உள்ளது.

இந்தநிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் சம்பந்தமே இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

கிருஷ்ணப்பா கவுதம்;

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கடும் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 9 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட கிருஷ்ணப்பா கவுதமுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் தான் விளையாடும் அணிக்கான தனது பங்களிப்பை கவுதம் சரியாக செய்து கொடுத்ததன் மூலம் இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. இருந்த போதிலும் அணியில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர்களும், குல்தீப் யாதவ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் பலரும் இருக்கும் போது கிருஷ்ணப்பா கவுதமிற்கு அணியில் என்ன வேலை இருக்கும் அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனாட்கட் போன்ற வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

இவனுகள எதுக்கு எடுத்தாங்கனு தெரியலயே; சம்பந்தமே இல்லாமல் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூன்று வீரர்கள் !! 2

வருண் சக்கரவர்த்தி;

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றிருந்தாலும், அவர் யோ – யோ டெஸ்டில் தேர்வு பெறாததால் இங்கிலாந்து அணிக்கு தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். உடற்தகுதி தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத இவரால் பீல்டிங்கில் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

இவனுகள எதுக்கு எடுத்தாங்கனு தெரியலயே; சம்பந்தமே இல்லாமல் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூன்று வீரர்கள் !! 3

மணிஷ் பாண்டே;

சீனியர் வீரர்கள் பலர் இல்லாததால் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியில் மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக ஐபிஎல் தொடர் உள்பட அனைத்து உள்ளூர் தொடர்களிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத மணிஷ் பாண்டே தனது பொறுமையான ஆட்டத்தின் மூலம் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரின் போதே கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்ட மணிஷ் பாண்டே தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. மணிஷ் பாண்டேவிற்கு பதிலாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் இளம் வீரர்களில் யாருக்காவது இடம் கொடுத்திருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

இவனுகள எதுக்கு எடுத்தாங்கனு தெரியலயே; சம்பந்தமே இல்லாமல் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மூன்று வீரர்கள் !! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *