இந்தியா இலங்கை டெஸ்ட் : உணவு இடைவேளை நிலைமை 1
pandya unleashes the beast

மூன்றாவது டெஸ்ட் :

இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி  டெஸ்ட் டெஸ்ட் போட்டி இலங்கை மண்ணில் உள்ள பல்லேகேலேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தியா பேட்டிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி தொடக்க முதலே அதிரடியாக ஆட தொடங்கியது.

அதிரடியாக ஆடிய இந்திய தொடக்க ஆட்டகாரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் சிகர் தவான் ஆகியோர் வேகமாக அரை சதம் கடந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் நிதனித்து ஆடிய லோகேஷ் ராகுல் 85 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த முறையும் ராகுலால் தனது சதத்தை பூர்த்தி செய்ய இயலவில்லை. இவர டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து பதிவு செய்யும் 7வது அரை சதம் ஆகும். இது அவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனை ஆகும்.

இந்தியா இலங்கை டெஸ்ட் : உணவு இடைவேளை நிலைமை 2
India’s Lokesh Rahul reacts as he leaves the ground after losing his wicket during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

தொடர்ந்து தனது அதிரடியை தொடர்ந்த சிகர் தவான் தனது 6வது சதத்தை கண்டார். கடந்த முதல் டெஸ்ட் போட்டியிளும் தவான் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இத்ன மூலம் வெளிநாட்டு மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் கண்ட இந்தியா வீரர்கள் பட்டியளில் இணைந்தார் தவான.

இந்தியா இலங்கை டெஸ்ட் : உணவு இடைவேளை நிலைமை 3
India’s Shikhar Dhawan gestures towards team’s dressing room as he celebrates scoring a century during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிதும் சோபிக்கவில்லை. கேப்டன் விராட் கோலி மட்டும் அணிக்கு சிறிது கரம் சேர்த்தார். அவர் 42 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த அஸ்வின் 31 ரன்கல் அடித்து ஒரளவிற்க்கு கை கொடுக்க இந்திய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 329 ரன்களுக்கு 6 விக்கெடுகளை இழந்து ஒரளவிற்க்கு நல்ல னிலையில் உள்ளது.

இலங்கை தரப்பில் மலிண்ட புஷ்பகுமாரா 3 விக்கெட் வீழ்த்தினார். மற்றோர் சுழற்பந்து வீச்சாளர் லஷ்கன் சண்டகான் தனது பங்கிற்க்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது நாள் :

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, சகா பாண்ட்யாவுடன் களம் கண்டார். ஆட்டம் தோடர்ந்த இரண்டாவது ஓவரிலிலேயே வ்ரித்திமான் சகா பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். 91 வது ஓவ்ரின் 3 வது பந்தை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பந்தில் பாய்ன்ட்டில் தில்ருவன் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பாண்யா சதம் :

பின்னர் வந்த குல்தீப் யாதவ் ஹர்திக் பாண்ட்யா ஜோடி நிதானமாக ஆடியது. அழகான சாட்களையும் அற்புதமான சில்லரை ரன்களையும் எடுத்தனர். நன்றாக ஆடிய இந்த ஜோடி குல்தீப் யாதவ் விக்கெட்டினாள் பிரிந்தது. சண்டகன் வீசிய பந்தை கட்டை வைக்க முற்ப்பட அது எட்ஜ் ஆகி கீப்பர் டிக்வெல்லாவிடம் சென்றது. அதை லாவகமாக பிடித்தார் கீப்பர். குல்தீப் 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேந்த இருவரும் 62 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி களத்தில் இறங்கினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் கண்டார். இது அவரது இரண்டாவது அரை சதம் ஆகும்.

இந்தியா இலங்கை டெஸ்ட் : உணவு இடைவேளை நிலைமை 4

61 பந்துகளில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில 4 பவுன்ரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

பாண்ட்யா அரை சதம் கண்ட அதே ஓவரிலேயே சண்டகன் பந்தில் அவரிடமே பந்தை திருப்பி பலமாக அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் முகமது சமி. பின்னர் கடைசி விக்கெட்டுக்கு வந்தார் உமேஷ் யாதவ். இது வேலைக்காகது என தனது அதிரடியை தொடர்ந்தார் ஹர்திக் பாண்ட்யா.

மலிண்டா புஷ்பகுமாரா வீசிய 115வது ஒவரை துவம்சம் செய்த அவர் அந்த ஒவரில் மட்டும் 4 4 6 6 6  என அடித்து இலங்கை அணி பந்து வீச்சை துவம்சம் செய்தார். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் விளாசினார். கையை கட்டி நின்று வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது இலங்கை அணி வீரர்களால். ஒரே ஓவரில் இந்தியய் வீரரால் அடிக்கப்பட்ட அதிக பட்ச் ரன் இது தான்.இவ்வாறு சுழ்ற்பந்து வீச்சாளர்களை விளாச, அந்த அணி கேப்டன் அவரை சமாளிக்க முடியாமல் வேகப்பந்து வீச தீர்மானித்தார்.நம்ம ஆளும் தனது பேட்டை மாற்றி தயாராக இருந்தார் விளாச. வீச வந்த லகிரு குமரா வின் 2வது பந்தை சிகருக்கு தூக்கி வீசினார் ஹர்திக். அப்போது 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்திருந்தார் நம்ம பாண்டி.

அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர் சண்டகன் பந்தில் ஒரு சிக்சர் தூகி வீசினார். பின்னர் 99க்கு நகர்ந்தார் ஹர்திக். முதல் சதத்தை எதிர் நோக்கிய பாண்ட்யா, லகிரு குமாராவின் பந்தில் ஒரு அழகான ஃபோர் அடிக்க தனது சர்வதேச போட்டிகளில் முதல் சதத்தை கண்டார். 86 பந்தில் அதிரடி சதம் கண்ட பாண்ட்யா அதில் 8 ஃபோர்களூம் 7 சிக்சர்களும் அடித்திருந்தார்.

 

இந்தியா இலங்கை டெஸ்ட் : உணவு இடைவேளை நிலைமை 5
pandya unleashes the beast

இவ்வேளையில் இந்திய மற்றோர் பக்கம் மெதுவாக தனது ரன்னை 500க்கு பக்கம் நகர்த்திக் கொண்டு போனது. உணவு இடைவேளையுன் போது இந்திய அணி 487 ரன்களுக்கு 9 விகெட்டுகளை இழந்திருந்தது.

களத்தில் பாண்ட்யா 108 ரன்களுடனும்

உமேஷ் யாதவ் 3 ரன்களுடனும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *