கே.எல் ராகுல் இல்லை... இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் !! 1

கே.எல் ராகுல் இல்லை… இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார்

எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் கொண்டுவர நிர்வாகம் நினைத்தால், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தற்போது கிரிக்கெ வர்ணனையாளராக இருந்து வருகிறார். கண்டதை பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்வதையே தனது வாடிக்கையாக வைத்திருக்கும் ஆகாஷ் சோப்ரா,
இந்த பொது முடக்கத்தால் வீட்டிலேயே முடங்கி போயுள்ள கிரிக்கெட் வீரர்களிடம் இப்போது ஆன்லைன் மூலம் பேட்டி எடுத்து வருகிறார்.

கே.எல் ராகுல் இல்லை... இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் !! 2

 

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் கேப்டன்சி குறித்தும், இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கருத்துகளை கூறினார்.

ஆகாஷ் சோப்ரா பேசியதாவது;

இந்திய அணி மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அடுத்த 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ கேப்டன்சியில் மாற்றம் தேவைப் பட்டால் ரோஹித் சர்மாவை கேப்டனாக்கலாம். எப்போதும் கோஹ்லியின் ஆட்டத்திறன் குறைந்துவிடாது. அவரின் ஆட்டத்திறன் ஓர் உயரத்தை எட்டிவிட்டது, இப்போது அதிலிருந்து அவர் திறன் கீழே இறங்காது. இது அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் கோஹ்லியின் ஆட்டம் சிறப்பாகவே இருக்கும்.

கே.எல் ராகுல் இல்லை... இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் !! 3

ஆனால் ஒரு அணிக்கு எப்போதும் கொஞ்சம் வித்தியாசமான வழிக்காட்டுதல் அவ்வப்போது தேவைப்படும். அந்த விஷயத்தை இந்திய அணி எட்டிவிட்டால், அப்போது ரோஹித் சர்மாவை அணிக்கு கேப்டனாக்கலாம். ஆனால் அதுவரை கோஹ்லி கேப்டனாகவே தொடர வேண்டும், ஒரு கேப்டனாக அவர் உயர்ந்துகொண்டு இருக்கிறார்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *