அடுத்த போட்டிக்கு இரண்டு முக்கிய வீரர்களும் ரெடி; சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 1

அடுத்த போட்டிக்கு இரண்டு முக்கிய வீரர்களும் ரெடி; சென்னை அணி அதிரடி அறிவிப்பு

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த டூவைன் பிராவோ மற்றும் அம்பத்தி ராயூடு ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக சென்னை அணி அறிவித்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் முதல் போட்டியில் மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

அடுத்த போட்டிக்கு இரண்டு முக்கிய வீரர்களும் ரெடி; சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 2

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியை கூட வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் இழந்த சென்னை அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிக மிக மோசமாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் இல்லாதது தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து ரெய்னாவிடமே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அடுத்த போட்டிக்கு இரண்டு முக்கிய வீரர்களும் ரெடி; சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 3

ஆனால் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது என சென்னை அணியே திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், ரெய்னா இல்லையென்றாலும் அம்பத்தி ராயூடு வந்துவிட்டால் கூட சென்னை அணியில் நிலவி வரும் பேட்டிங் பிரச்சனை சரியாகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸாக, டூவைன் பிராவோ மற்றும் அம்பத்தி ராயூடு ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக சென்னை அணியே அறிவித்துள்ளது.

அடுத்த போட்டிக்கு இரண்டு முக்கிய வீரர்களும் ரெடி; சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 4

சென்னை அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “அம்பத்தி ராயூடு முழுமையாக குணமடைந்துவிட்டார். அதே போல் டூவைன் பிராவோவும் போட்டிக்கு தயாராகி விட்டார், வலைபயிற்சியில் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். தோல்விகளில் இருந்து சென்னை அணி நிச்சயம் மீண்டு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *