இந்திய இளம் வீரர்கள் இனிமேல் உருப்பிட வேண்டுமானால் இதனை செய்யுங்கள்! பிசிசிஐக்கு கும்ளே அறிவுரை 1

இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் இனி நன்றாக ஆட வேண்டும் ஆனால் இந்தியாவின் பல முக்கியமான இளம் திறமையான வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.

உலகின் மற்ற நாட்டு வீரர்களை போல இந்திய வீரர்களுக்கு அவ்வளவு சலுகைகள் கிடையாது. ஆனால் ,முதல்தரப் போட்டியிடும் சர்வதேச போட்டியில் ஆடும் வீரர்களுக்குச் சம்பளம் அதிகம் என்பது உண்மை. இப்படி இருந்தாலும் வெளிநாட்டு தொடரில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து வகையான நாட்டிற்கும் சென்று டி20 தொடரில் விளையாடி அந்த நாட்டின் இயல்பு நிலைக்கு ஏற்ப விளையாடி அனுபவம் பெறுகின்றனர்.இந்திய இளம் வீரர்கள் இனிமேல் உருப்பிட வேண்டுமானால் இதனை செய்யுங்கள்! பிசிசிஐக்கு கும்ளே அறிவுரை 2

ஆனால் இந்திய வீரர்களுக்கு அது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து தோற்று வருகிறது. தற்போது இதற்கு ஒரு முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ க்கு வழங்கியுள்ளார் அணில் கும்ப்ளே.

இது குறித்து அவர் பேசியதாவது…

கண்டிப்பாக இதனை பேசியே பிசிசிஐ கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது குறித்து கண்டிப்பாக அவர்கள் ஒரு முடிவெடுக்க வேண்டும். தற்போது ஒரு சில தடைகள் உள்ளன. சொல்லப் போனால் தற்போது யுவராஜ் சிங் global டி20 கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்று இருக்கிறார்.இந்திய இளம் வீரர்கள் இனிமேல் உருப்பிட வேண்டுமானால் இதனை செய்யுங்கள்! பிசிசிஐக்கு கும்ளே அறிவுரை 3

இதனை பார்க்கும் போது இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் ஆட அனுமதிப்பது யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எந்த பிரச்சனையும் வராது என்று தெரிகிறது. ஆனால், தற்போது பிசிசிஐ அவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறது .

இளம் திறமையான இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் ஆட அனுமதித்தால் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தான் அனுபவம் அதிகமாக கிடைக்கும். பலனும் அதிகம். முதலில் அவர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட வாய்ப்புகள் அதிகம் ஆக்கப்படும்.

இந்திய இளம் வீரர்கள் இனிமேல் உருப்பிட வேண்டுமானால் இதனை செய்யுங்கள்! பிசிசிஐக்கு கும்ளே அறிவுரை 4
India’s Virat Kohli speaks with Hardik Pandya (R) during the first One Day International cricket match between South Africa and India at Kingsmead cricket ground on February 1, 2018 in Durban. / AFP PHOTO / ANESH DEBIKY (Photo credit should read ANESH DEBIKY/AFP/Getty Images)

மேலும் அந்த இடத்தில் விளையாடி அவர்களுக்கு அனுபவம் அதிகமாகும் . இதனால் வெளிநாட்டு தொடர்களில் நம்மால் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *