ஐதராபாத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபில்-இல் இருந்து விலகியுள்ளார். இந்த ஐபில்-இல் அவரை சில போட்டிகளில் விளையாடவில்லை, அதற்கு காரணம் தொடையில் ஏற்பட்ட காயம் மற்றும் கழுத்து வலி தான்.
இந்த தகவலை ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்தார்.
“இனி வரும் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ராவால் விளையாட முடியாது,” என டாம் மூடி கூறினார்.
சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இடம் பெற விஜய் ஹசாரே ட்ராப்பியில் விளையாடவேண்டும் என நெஹ்ராவிடம் கூறியது பிசிசிஐ. ஆனால், காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ஆஷிஷ் நெஹ்ரா.
நெஹ்ரா இல்லாததால், அவருடைய வேலையை இளம் வீரர்களான சித்தார்த் கவுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் செய்கிறார்கள். சித்தார்த் கவுல், சில போட்டிகளை தன் அணிக்காக வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.
யுவராஜ் சிங், இவரும் அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட வில்லை. இதனால், உடல்நலத்தை சோதனை செய்ய செல்வார் என தெரிகிறது.
கடந்த முறை ஐபில் கோப்பையை வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெளியேறும் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பெங்களூரில் மே 17-ஆம் தேதி மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அல்லது புனே அணியை எதிர்கொள்ளும்.