நல்ல பார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர்கள்…
இந்திய அணி முக்கியமான தொடரில் தோல்வியை தழுவியதென்றால் அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் திறமை குறைவான அல்லது உடற் தகுதி இல்லாத ஆல்ரவுண்டர்களை தேர்ந்தெடுத்தது தான் முக்கிய காரணம் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இரு ஆல்ரவுண்டர்களும் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்க படுகிறது.