ரிஷப் பண்ட்டிற்கு இடம் கொடுங்க... யாரா இருந்தாலும் அசால்டா துவம்சம் செய்யலாம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 1

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரிஷப் பண்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் முடிவில் ஹாங்காங் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின. மற்ற அனைத்து அணிகளும் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

ரிஷப் பண்ட்டிற்கு இடம் கொடுங்க... யாரா இருந்தாலும் அசால்டா துவம்சம் செய்யலாம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளன. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இந்த முறை வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் வழக்கம் போல் முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்துவதோடு இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

ரிஷப் பண்ட்டிற்கு இடம் கொடுங்க... யாரா இருந்தாலும் அசால்டா துவம்சம் செய்யலாம்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆர்.பி சிங், இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு நிச்சயம் இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்.பி சிங் பேசுகையில், “தினேஷ் கார்த்திக் அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ரிஷப் பண்டிற்கு இந்திய அணி ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் நிச்சயம் விளையாட வேண்டும். ரிஷப் பண்ட் இந்திய அணியின் மேட்ச் வின்னர், அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது எதிரணிகளுக்கு பெரும் சவாலாக திகழும், அவரால் இந்திய அணிக்கு அசால்டாக வெற்றிகளை பெற்று கொடுக்க முடியும். தினேஷ் கார்த்திக் சற்று குழப்பத்துடன் காணப்படுகிறார். அதே போல் கே.எல் ராகுல் கடந்த இரண்டு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. அவரது உடல் மொழியை பார்க்கையில் அவர் அதிகம் தடுமாறுவதை போன்றே தெரிகிறது. அவரால் இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணிக்கான பங்களிப்பை செய்து கொடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. காயத்தில் இருந்து கே.எல் ராகுல் தற்போது தான் குணமடைந்துள்ளதால் அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு கொடுப்பதே சரியானதாக இருக்கும். அவரும் தனது பழைய பார்மிற்கு திரும்புவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தோன்றுகிறது. எனவே ரிஷப் பண்ட்டிற்கு இடம் கொடுப்பதே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *