இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், இந்திய அணி கடைசி போட்டியிலும் தோல்வியடையும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பந்துவீச்சில் நவ்தீப் சைனி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்றே எதிர்பார்க்கபப்டுகிறது.

இரண்டு வீரர்கள் அதிரடி நீக்கம்; கடைசி போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், மாயன்க் அகர்வால், விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, தங்கராசு நடராஜன், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *