முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !! 1

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த அக்‌ஷர் பட்டேல் தனது முதல் தொடரிலேயே மிகப்பெரும் மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் கொண்ட இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து கை கொடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !! 2

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவை தவிர மற்ற அனைத்து சீனியர் வீரர்களும் ஏமாற்றம் கொடுத்தாலும், ரிஷப் பண்ட் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 294 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்திலும் வாசிங்டன் சுந்தர் தொடர்ந்து பொறுப்பாக விளையாடினாலும், அக்‌ஷர் பட்டேலுக்கு பிறகு களமிறங்கிய வீரர்கள் வாசிங்டன் சுந்தருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத வாசிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !! 3

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் லாரன்ஸ் 50 ரன்களும், ஜோ ரூட் 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு கை கொடுத்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் அக்‌ஷர் பட்டேல் மற்றும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ளா முடியாமல் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 135 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தநிலையில், இந்த தொடரின் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த அக்‌ஷர் பட்டேல் தனது முதல் தொடரிலேயே மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.

முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !! 4

அறிமுக போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல், அகமதாபாத்தில் நடந்த பகலிரவு(3வது) டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது டெஸ்ட்டில் மொத்தமாக 7, 3வது டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய அக்ஸர் படேல், கடைசி டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் என 3 டெஸ்ட்டில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டெஸ்ட்டிலுமே குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !! 5

இந்த தொடரில்(அதுவும் 3 போட்டிகளில்) 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம், அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் அக்ஸர் படேல். இதற்கு முன்பாக 2008ல் இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் அறிமுக டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அக்ஸர் படேல் முறியடித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *