இந்தியா தென் ஆப்பிரிக்கா உடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ தலைவர் ராகுல் உறுதி படுத்தி உள்ளார் 1

பிசிசிஐ தலைவரான ராகுல் ஜோஹ்ரி, தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா உடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக உறுதி படுத்தி உள்ளார்.

பிசிசிஐ தலைவரான ராகுல் ஜோஹ்ரி கூறியது :

“இந்தியா தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் கண்டிப்பாக உள்ளது. தேதிகளில் சில முன்னும் பின்னுமாக உள்ளது, ஆனால் இந்த சுற்று பயணம் ஒரு முழு சுற்று பயணமாக பயணமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

இதற்க்கு முன்னாள் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு நான்கு வருடத்திற்கு முன்னாள் சுற்று பயணம் மேற்கொண்டது அதற்கு பிறகு தற்போது தான் இந்தியா தென் அப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளது இதனால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

2013இல் தோனி தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்று பயணம் சென்றது ஆனால் அப்போது வேறு வேறு போட்டிகள் இருந்ததால் இது ஒரு குறுகிய பயணமாகவேஇருந்தது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா உடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிசிசிஐ தலைவர் ராகுல் உறுதி படுத்தி உள்ளார் 2

இதற்கு பிறகு 2015இல் டி வில்லியர்ஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு சுற்று பயணம் வந்தது இதில் மூன்று டி 20 போட்டிகளும் ஐந்து ஒரு நாள் போட்டிகளும், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியது.

நீண்ட வருடத்திற்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா உடன் பெரிய தொடர்களை விளையாட உள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்த வருடம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது இது மிகவும் முக்கியமான தொடர்களாக இருக்கும்.

தற்போது இந்திய அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது இதில் இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *