ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்கு இதுதான் காரணமாம் ! விளக்கமளித்த ராஜிவ் சுக்லா 1

ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்கு இதுதான் காரணமாம் ! விளக்களித்த ராஜிவ் சுக்லா

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்கு இதுதான் காரணமாம் ! விளக்கமளித்த ராஜிவ் சுக்லா 2

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கும், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்கு இதுதான் காரணமாம் ! விளக்கமளித்த ராஜிவ் சுக்லா 3

இவ்வாறு ஐபிஎல் வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நடத்திய அவசர கூட்டத்தில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரை ரத்து செய்வதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் ராஜிவ் சுக்லா கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில் “கிரிக்கெட் வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரது பாதுகாப்புக்கும் உத்திரவாதம் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் உதவியாக இருந்த சுகாதாரத்துறையினர், வீரர்கள், ஸ்டாப்ஸ், அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், பார்ட்னர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ நன்றியை தெறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை ரத்து செய்ததற்கு இதுதான் காரணமாம் ! விளக்கமளித்த ராஜிவ் சுக்லா 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *