2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்வதற்கு தோனி செய்த காரியங்கள் என்ன என்பதை பிரக்யான் ஓஜா விவரமாக தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வெற்றி பெற்றது, அதற்குப் பின் இந்திய அணி தோனி தலைமையில் 28 வருடம் கழித்து 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை வென்று அசத்தியது.
அந்த சமயத்தில் டி20 தொடரை விட ஒரு நாள் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால்,இந்திய அணி t20 கோப்பையை வென்றதை விட..ஒரு நாள் கோப்பையை வென்றது அதிகமாக பேசப்பட்டு வந்தது.
2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தோனி ஒரு சிறந்த கேப்டனாகவும்.., அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது அதிரடி பேட்ஸ்மேனாகவும் காட்சியளித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனி 91 ரன்கள் அடித்து கோப்பையை கைப்பற்றுவதற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யன் ஓஜா, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதற்கு, தோனி தான் மிக முக்கிய காரணம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரக்யான் ஓஜா தெரிவித்ததாவது, “2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் தோனியின் செயல்பாடுகள்தான், தோனி அணியிலிருந்த 25 முதல் 30 வீரர்களை நன்கு உணர்ந்து அவர்களை சிறப்பாக பயன்படுத்தினார். உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 40 போட்டிகளில் இருந்தே அனைத்தையும் திட்டமிட்டு விட்டார், ரண்களை எளிதாக அடித்து விடலாம் ஆனால் நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவதற்கு அனுபவம் வேண்டும், அனுபவம் இல்லையென்றால் அதற்கு மிகவும் வருத்தப்படுவோம், லீக் சுற்றில் அந்த தாக்கம் பெரிய அளவு தெரியாது.. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் குறிப்பாக அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இதனால் நாம் பாதிக்கப்படுவோம். நிச்சயம் இதிலிருந்து நமக்கு தெரிவதெல்லாம் அனுபவம் எப்பொழுதுமே கை கொடுக்கும் என்று தோனி குறித்து பிரக்யான் ஓஜா தெரிவித்திருந்தார்.
மேலும் உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது லிமிடெட் ஓவருக்கான இந்திய அணி, வீரர்களை மாற்றி மாற்றி விளையாட வைப்பது, உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரக்யான் ஓஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.