பல களேபரங்களுக்கு இடையில் பென் ஸ்டொக்சிற்கு ஒரு சந்தோசமான செய்தி வந்துள்ளது. ஆம், இவரது கேர்ள் பிரண்டான க்லாரி ராட்க்லிஃப் உடன் இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது.
Cricket with my girls ??? https://t.co/mzFxxghBp4
— Clare Stokes (@clarey_11) September 24, 2017
க்லாரி ராட் க்லிஃப் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளவர்.
இவரும் பென் ஸ்டோக்சும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமனம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் இந்த வார இறுதியில் க்லாரி ராட்க்லிஃப் இன் வீட்டில் நடைபெரும். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி சோமர்செட் நகரில் உள்ள ஒரு விடுதியில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரின் காவல் நிலைய சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலனதி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டோல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலானது அணி வெற்றி பெற்றது. மேலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 73 ரன்கள் குவித்தார்.
போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் இருவரும் சிலருடன் சண்டை இடடதாகத் தெரிகிறது.
மேலும், அந்த சண்டையின் போது பென் ஸ்டோக்ஸ் ஒருவரை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டோல் நக காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்னும் அவரிடம் பிரிஸ்டோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்க்கு முன்பு 2012 ஆண்டும் இதே போல் அவருடைய ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 2013 ஆண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக ஆடிய போது கடை இரவில் குடித்து விட்டு ஊர் சுற்றியதற்க்காக அவரது நாடான நியூசிலாந்திற்க்கு திருப்பி அனுப்ப பட்டார்.
பின்பு அடுத்த வருடமும் சும்மா இருக்கவில்லை இவரது கை. 2014 ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது அவரது லாக்கரின் அறையில் இருந்த பூட்டை அவரது கையால் ஓங்கி குத்தி அவரது கையை முறித்துக் கோண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது,
https://twitter.com/PRINCE3758458/status/913221515956457472
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கயுள்ளார். இவரிடமிருந்தே மேற்கத்திய கலாச்சாரம் எவ்வளவு கொடூரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.
விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இரவு பாருக்கு வெளியே நடு ரோட்டில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குடி போதையில் தகராறில் ஈடுப்பட்ட காயத்துக்கு மிகப்பெரிய கட்டு போட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராயின் திருமணம் பிரான்சில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்டோக்ஸ், கையில் மிகப்பெரிய கட்டுடன் காணப்பட்டார். இதன் மூலம் அவரின் தாக்குதல் மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளது தெளிவாக தெரிவதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்