நாங்க மட்டும் கொஞ்சம் விட்ருந்தா இந்நேரம் இதுதான் நடந்திருக்கும் - ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் பேட்டி! 1

ரிஷப் பண்ட்டுக்கு என்ன நடந்தது என்று விபத்து ஏற்பட்ட தருணங்களை பற்றி விரிவாக பேசியுள்ளார் அவரை காப்பற்றிய பஸ் டிரைவர்.

அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.

நாங்க மட்டும் கொஞ்சம் விட்ருந்தா இந்நேரம் இதுதான் நடந்திருக்கும் - ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் பேட்டி! 2

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ரிஷப் பண்ட்டுக்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன்கள் பறித்து செல்லப்பட்டதாக வதந்திகள் பரவியது. இது எந்த அளவிற்க்கு உண்மை என்பதை ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாங்க மட்டும் கொஞ்சம் விட்ருந்தா இந்நேரம் இதுதான் நடந்திருக்கும் - ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் பேட்டி! 3

டிரைவர் பேசியதாவது: நான் தினமும் இந்த வழியாக தான் பேருந்து ஓட்டுவேன். ஹரித்வாரில் வழக்கம்போல காலை 4.25க்கு பேருந்தை எடுத்து இந்த வழியாக வந்துகொண்டிருந்தேன். நான் சென்றுகொண்டிருந்த வழியில் அதிவேகமாக வந்த கார் நிலைதடுமாறி நடுவில் இருந்த தடுப்பை உடைத்து எதிர்திசையில் வாகனங்கள் ரோட்டிற்கு சென்றது.

உடனடியாக எங்களது வண்டியை நிறுத்திவிட்டு நானும் நடத்துனரும் விபத்தான வண்டி நோக்கி ஓடினோம். கார் அப்போது தான் தீ பிடிக்க துவங்கியது. எங்கள் இருவரால் திறக்க முடியவில்லை. அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தோம். அவரை வெளியே எடுத்து பாதுகாப்பாக உக்கார வைத்தபின் கார் இன்னும் அதிகமாக தீப்பிடித்து எரிந்தது.

அருகில் காவலர்களுக்கு போன் செய்தோம். யாரும் எடுக்கவில்லை. அவரது அம்மாவின் நம்பர் கொடுத்து பேசச்சொன்னார். அந்த நம்பரும் ஸ்விட்ச்-ஆப் இல் இருந்தது. ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்த 15 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். அதற்கிடையில், நான் தான் ரிஷப் பண்ட் என கூறினார். எனக்கு கிரிக்கெட் பற்றி பெரிதாக தெரியாது என்பதால் யார் என்று தெரியவில்லை. என்னுடைய நடத்துனர் தான் அவர் இந்திய அணிக்கு விளையாடும் கிரிக்கெட் வீரர் என்று கூறினார்.

நாங்க மட்டும் கொஞ்சம் விட்ருந்தா இந்நேரம் இதுதான் நடந்திருக்கும் - ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் பேட்டி! 4

அவர் விபத்தான பகுதியில் அவருடைய பணம் மற்றும் சில பொருட்கள் இருந்தது. அதை அவரிடமே ஒப்படைத்துவிட்டோம். வதந்திகள் வருவது போல யாரும் அவரது பொருட்களை திருடவோ பறிக்கவோ இல்லை. காரில் வேறு யாராவது இருந்தார்களா என கேட்டோம். தனியாக மட்டுமே வந்தேன் என்று அவரே கூறினார். முகம் முழுவதும் ரத்தமாக இருந்தது. ஆம்புலன்ஸ் வரும்வரை அதை துடைத்துவிட்டோம். கொஞ்சம் தண்ணீர் கொடுத்தோம். அவ்வளவு தான்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *