தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இதன் 4வது போட்டியில் உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது.
இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியை பாராட்டினார் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்து வீச முடிவு செய்தது. இந்தியாவின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்சின் முடிவில் 319 ரன் அடித்தது.
முதலில் களமிறங்கிய தவான் மற்றும் ரோகித் பொறுமையாக விளையாடி, ரன் சேர்த்து வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன் சேர்த்த நிலையில் தவான் விக்கெட் பறிபோனது. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, ரோகித்துடன் சேர்ந்து பொறுமையாக விளையாடிவந்தார்.
ரோகித் சர்மா ரன் அவுட் ஆக, அடுத்து வந்த யுவராஜ், கோலியுடன் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்தார். இதனால், இந்தியாவின் ரன் மளமளவென ஏறியது. கடைசி நேரத்தில் வந்த ஹர்டிக் பாண்டியா, அவர் விளையாடிய 5 பந்துகளில் 19 ரன் அடித்தார், அதில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.
அந்த கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 164 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அசார் அலி 50 (65) மற்றும் முகமது ஹபீஸ் 33 (43) ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக போராடினர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை, இருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
Great team effort, studded with some outstanding individual performances. Well done Team India. @imVkohli @imjadeja @YUVSTRONG12 @ImRo45 ?
— Ashwin ?? (@ashwinravi99) June 4, 2017