வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த ஐபில் தொடரில் சொல்லி கொள்ளும் போல் விளையாடவில்லை. இதனால் பெங்களூரு ரசிகர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டார் கெய்ல்.
தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. எப்போதும் விளையாடாதபோல் இந்த ஐபில்-இல் மோசமாக விளையாடி வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது.
அதுமட்டுமில்லாமல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் விளையாடிய போட்டியில் 49 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி ஐபில் வரலாற்றிலேயே குறைந்த பட்ச ஸ்கோர் என தேவையில்லாத பட்டத்தையும் வாங்கியது.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல், “பெங்களூரு அணி இதுவரை நடந்த போட்டியில், நான் உட்பட வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏமாற்றினாலும், எங்களுக்கு இதுவரை சிறப்பாக ஆதரவு தந்ததற்கு மிக்க நன்றி. ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததால் எங்களை மன்னிக்க வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சுனில் நரேன் மிக சிறப்பாக விளையாடி வருகின்றார். அவரின் 15 பந்தில் 50 ரன்கள் குவித்த போட்டியை மறக்க முடியாது. அவர் பேட்டிங்கில் அற்புதம் செய்து வருகின்றார்.” என கூறியுள்ளார்.