இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஆட்ட னியர முடிவில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 348 ரன்களை குவித்து 3 விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக அலைஸ்டர் குக்கும் அறிமுக வீரர் மார்க் ஸ்டோன்மேனும் களம் இறங்கினர். இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியாகவும். மேலும் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அபாரமாக ஆடிய முன்னாள் கேப்டன் குக் 153 ரன்கள் குவித்தார். இவருடைய இந்த ஆட்டத்தில் 23 போர்கள் அடித்திருந்தார். அடுத்து வந்த இந்நாள் கேப்டன் ஜோ ரூட்டும் சதம் விளாசினார் அவர் 136 ரன்கள் அடித்தார் இதில் 22 போர்கள் அடங்கும்.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 348 ரன்கள் குவித்தது குக் 153 ரன்களுடனும் டேவிட் மலன் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து தொடக்க முதலே, ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.முதல் நாலில் இருந்தே எதிரணி பந்து வீச்சளார்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலைஸ்டர் குக் அனைத்து பக்ககங்களும் பந்தை விளாசினார். 407 பந்துகளை சந்தித்த அவர் 243 ரன்களை குவித்தார். அதில் 33 பவுண்டரிகள் அடங்கும்.
இங்கிலாந்தின் அடுத்தடுத்து வந்த வீரர்களா ஓரளவிற்க்கு தோது கொடுக்க,இங்கிலாந்து 514 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில்,ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்க்கு 44 ரன் எடுத்திருந்தது.