திடீரென மொட்டை அடித்து கொண்ட டேவிட் வார்னர்; காரணம் என்ன தெரியுமா..? 1

திடீரென மொட்டை அடித்து கொண்ட டேவிட் வார்னர்; காரணம் என்ன தெரியுமா..?

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவாக மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இதை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் சகநாட்டு வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோருக்கும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும் ஆதரவு அளிக்கும் படியும் வார்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரொனாவினால் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *