முன்னாள் இந்திய வீரரான தீப்தாஸ் குப்தா, நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதியது.
உலக சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை ஈசியாக வீழ்த்தி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான தீப்தாஸ் குப்தாவும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, தொடர் நாயகன் விருதை வென்ற ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு இடம் கொடுக்கவில்லை.
மிடில் ஆர்டரில் ஜாஸ் பட்லர், அஸ்லன்கா ஆகியோரை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, அடுத்ததாக மொய்ன் அலி, டேவிட் வீஸ், ஹசரங்கா, ரசீத் கான், டிரண்ட் பவுல்ட் போன்ற வீரர்களையும் தனது சிறந்த ஆடும் லெவனில் எடுத்துள்ளார்.
தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;
முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஜாஸ் பட்லர், சாரித் அஸ்லன்கா, மொய்ன் அலி, டேவிட் வீஸ், டூவைன் பெரிடோரியஸ், வானிது ஹசரங்கா, ரசீத் கான், அன்ரிக் நோர்கியா, டிரண்ட் பவுல்ட்.