கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுவரஸ்யத்திற்காகவும் புதிய யுக்திகளையும் திட்டங்களையும் அணியோ அல்லது ஐசிசி நிர்வாகமோ வகுத்து வருகிறது. அதில் குறிப்பாக பவர்ப்ளே, 2 புதிய பந்துகள் என பல சீர்திருத்தங்கள் வந்திருந்த போதிலும். அறிவித்த அனைத்தும் வெற்றி கண்டு விடும் என்றால் கேள்விகுறி தான். கிரிக்கெட்டில் தோல்வி என்பது புதிதல்ல. ஆனால் அது விளையாட்டுக்கே ஆபத்தாக முடிகையில். சற்று சிந்திக்கவே வைக்கிறது.
இப்படி நிகழ்ந்த 9 பேரழிவு நிகழ்வுகளையே நான் பார்க்க இருக்கிறோம்.
1. முத்தரப்பு டெஸ்ட் தொடர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1912ம் ஆண்டு, தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இரு அணிகளும் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மூன்று முறை சந்திக்கும்படி வரையறுக்க பட்டது. மொத்தம் ஒன்பது போட்டிகள், ஒரு அணி 6 போட்டிகள் ஆடியிருக்கும். ஆட்டம் ஒரு அணிக்கு சாதகமாகவும், மக்களுக்கு சலிப்பு தருவதாகவும் போக அதன் பிறகு கைவிடப்பட்டது. மேலும் 1998ம் ஆண்டு ஒருமுறை நடத்தப்பட்டது. மக்கள் வாக்கெடுப்பில் வேண்டாம் என மீண்டும் கைவிடப்பது.