எல்லாம் கனவு மாதிரி இருக்கு… மெக்கல்லம் மகிழ்ச்சி
ஐ.பி.எல் 2018 தொடருக்கான ஏலத்தில் தன்னை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்திருப்பது குறித்து மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
நேற்றும், இன்றும் நடைபெற்ற இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றன.
இதில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான பிராண்டம் மெக்கல்லம்மை, கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 3.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் தான் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்ந்து பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளது குறித்து, மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Very very happy to be joining up with @RCBTweets. In @imVkohli and @ABdeVilliers17, they are two blokes I have dreamed of playing with!
— Brendon McCullum (@Bazmccullum) January 28, 2018
இது குறித்து மெக்கல்லம் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “பெங்களூர் அணியில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் என இரண்டு ஜாம்பவான்களுடன் விளையாட வேண்டும் என்ற கனவும் தற்போது நிறைவேறியுள்ளது” என்பது போன்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.