எதிர்வரும் டி.20 உலகக்கோப்பையை இங்கிலாந்து தான் வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கெல் வாகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஆறு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதே போல் விண்டீஸ் அணி 2 முறையும், பாகிஸ்தா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் துபாய் மற்றும் ஓமனில் வைத்து நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணிக்கு கனவாக இருக்கும் உலகக்கோப்பையை வெல்வதற்கு தேவையான முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் இந்நாள் வீரர்கள் சிலர் இந்த வருட உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரரும், சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவருமான மைக்கெல் வாகன், டி.20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணியே வெல்லும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைக்கெல் வான் பேசுகையில், “இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கிலாந்து அணி எந்தவிதத்திலும் குறையே இல்லாத பூர்த்தியான, முழுமையான அணியாக உள்ளது என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
2019 உலக கோப்பையை ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது. டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக இங்கிலாந்து அணி ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பையில் முழுமையான அணியாக களமிறங்குவதால், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக மைக்கேல் வான் கூறியிருக்கிறார்.