சாம்பியன்ஸ் டிராபியின் போது பக்க முறிவால் அவதிப்பட இங்கிலாந்தின் வேகப்பந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், அடுத்த மாதம் கடைசியில் தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடப்போகும் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் விளையாடமாட்டார் என தெரிகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது, காயம் ஏற்பட்டதால், மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இவருக்கு காயம் சரியாக 4-இல் இருந்து 6-வாரம் ஆகுமாம், இதனால் தென்னாப்ரிக்காவுடன் விளையாடவேண்டிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான். முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 6 அன்று லார்ட்ஸ் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 13 அன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்திலும் நடக்கிறது.
“இது இடது பக்க முறிவு தான். இது பெரிய காயம் இல்லை, ஆனால் நல்ல தகவலும் இல்லை. இந்த காயம் சரியாக எப்படியும் 4 – 6 வாரம் ஆகும். நான் கிரிக்கெட் விளையாட எப்படியும் 6 வாரங்கள் ஆகி விடும். முதல் 10 – 14 நாட்களுக்கு நான் ஓய்வை தவிர வேறெதுவும் செய்யக்கூடாது,” என வோக்ஸ் கூறினார்.
கடந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகள் எடுத்தார் வோக்ஸ் – அதில் 24 விக்கெட்டுகள் பாகிஸ்தான் அணியுடன். வங்கதேசம் மற்றும் இந்தியா பயணத்தின்போது விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் சொல்லும்படி விளையாடவில்லை.
ஜேம்ஸ் அண்டர்சனும் இடுப்பு காயத்தால் அவதி பட்டு வருகிறார். தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளராக ஆண்டர்சன், வோக்ஸ், ப்ரோடு ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி உதவி செய்வார்கள். முழுங்கால் காயத்தால் அவதிப்படும் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மார்க் வுட், ஜேக் பால், ஸ்டீவன் பின்ன் – இவர்களில் யாரவது அணியில் இடம் பிடிப்பார்கள்.