தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதற்கு யார்தான் ஆசைப்படமாட்டார் என்று குஜராத்தின் டைட்டன் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஷித் கான் 2021 வரை ஹைதராபாத் அணிக்காக 76 போட்டிகளில் பங்கேற்று 93 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
எப்படிப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ரஷீத் கானை 2022 ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது அணியில் தக்கவைக்க ஆர்வம் காட்டியது, ஆனால் எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் ரஷித் கான் அணியில் இருந்து விலகினார்.
இதன்காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் கட்டமைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, ரஷித் கானை 15 கோடி ரூபாய் தனது அணியில் இணைத்துக்கொண்டது.
இந்த நிலையில் ரஷித் கான் குஜராத் டைட்டன் அணி குறித்தும்,சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், “தற்போது நான் குஜராத் அணிக்கு தேர்வாகியுள்ளேன்,எனவே இதுதான் என்னுடைய அணி,இங்கு என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்,இந்த அணிக்காக விளையாடுவது நினைத்து பெருமை அடைகிறேன்.குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய தலைமையின் கீல் விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக உள்ளது,ஹர்திக் முதன் முறை அணியை வழிநடத்த உள்ளார்,அதை காண்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்,அனைத்து வீரர்களுக்கும் அந்த ஆசை இருக்கும்,ஆனால் தற்போது நான் குஜராத் அணிக்காக விளையாடவுள்ளேன்,அதை கவுரவமாக கருதுகிறேன் என்று ரஷித் கான் பேசியிருந்தார்.
மேலும் பேசிய அவர்,நான் உலகின் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளேன்,இன்னும் சொல்லப்போனால் நானும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளேன், அந்த அனுபவங்கள் என் மனதில் நன்றாக. பதிந்துள்ளது, நிச்சயம் இதை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பகிர்ந்துகொள்வேன் என்றும் ரஷித் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.