இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் டிராவிட் தான் காரணம்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 1

இந்திய கிரிக்கெட் அணிக்கு திறமையான பல இளம் வீரர்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதற்கு ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகன் பாராட்டியுள்ளார்.

சச்சின் களத்தில் இருந்தால் தான் இந்திய அணி வெற்றி பெறும், சச்சின் விக்கெட்டை இழந்துவிட்டால் இந்திய அணியால் அந்த போட்டியில் வெற்றி பெறவே முடியாது என கருதி ரசிகர்கள் தங்களது தொலைக்காட்சியையே அனைத்துவிடுவதை வழக்கமாக இருந்ததை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் தோனியின் வருகைக்கு பிறகு இந்திய அணி ஒரு தனி நபரை நம்பி உள்ளது என்ற கருத்து முற்றிலும், களத்தில் கடைசி வீரர் இருக்கும் வரை இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என அனைவரும் பாராட்டும் அளவிற்கு தோனி மிக சிறந்த ஒரு அணியை கட்டமைத்தார். இளம் வீரர்கள் பலருக்கு தோனி வாய்ப்பு கொடுத்ததே அவரை மிக சிறந்த கேப்டனாகவும் மாற்றியது, அதையே தற்போது விராட் கோலியும் செய்து வருகிறார்.

இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் டிராவிட் தான் காரணம்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 2

ரோஹித் சர்மா, விராட் கோலி என இந்திய அணியின் அனைத்து சீனியர் பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழந்துவிட்டாலும், கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களே இறுதி வரை நம்பிக்கை இழக்காமல் தன்நம்பிக்கையுடன் போராடி இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்து வருவதை கன்கூடாக பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணியும் சமகால கிரிக்கெட் உலகின் வல்லரசாகவும் மாறி வருகிறது.

திறமையான பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு அடுத்தடுத்து கிடைத்து வருவதற்கு, இளம் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இளம் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் கொடுக்கும் பயிற்சியே அவர்களை அடுத்த கட்டத்திற்கும் அழைத்து செல்கிறது. அது இந்திய அணிக்கும் பயனுள்ளதாகவும் அமைந்து வருகிறது.

இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் டிராவிட் தான் காரணம்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 3

இந்தநிலையில், இந்திய இளம் வீரர்கள் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கெல் வாகன், இது அனைத்திற்கும் ராகுல் டிராவிட் தான் மிக முக்கிய காரணம் என பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து மைக்கெல் வாகன் பேசுகையில், “இந்திய அணி பின்னால் என்ன நடைமுறைகள் செயல்படுகிறதோ அது மிகவும் சிறப்பான விஷயமாகும். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய இளம் வீரர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறதோ, அதைவிட ராகுல் டிராவிட் பயிற்சியில் இந்திய ஏ அணி இளம் வீரர்களுக்குச் சரியான மனநிலையை விதைத்து வருகிறது. டிராவிட் பயிற்சியின் கீழ் அவர்கள் வளர்வதால் சரியான பாதையில் பயணிக்கின்றனர். அவர்களுக்குச் சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு உள்ள நெருக்கடியைச் சர்வசாதாரணமாகச் சமாளித்து விடுகின்றனர். இதற்கு முழு காரணமும் ராகுல் டிராவிட் மட்டுமே. இதைச் சரியாகச் செய்ய அவர் ஒருவரால் மட்டுமே முடியும். இதுதான் எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும் செயலாகும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *