ரெஸ்டோ-பார் சங்கிலி விளம்பரத்திற்காக அவருடைய பெயரை பயன் படுத்தியதால் வழக்கு தொடுத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பிர். இந்த பிரச்சனை டெல்லி உயர் நீதிமன்றம் வரைக்கும் சென்றது.
சட்ட நிறுவனம் ஜெய்ட்லீ & பக்சி மூலம் நீதிபதி ஆர்.ஸ். எண்டுலா மூலம் காம்பீர் சார்பில் ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அந்த மது கடை அவருடைய பெயரை பயன் படுத்த கூடாது என்பது தான் கம்பிருக்கு வேண்டும் என தகவல் வந்துள்ளது. கம்பிர் மது அருந்த மாட்டார், இதனால் மதுக்கடைகள் அவரின் பெயர்களை உபயோகிப்பதால் அவருக்கு பிடிக்க வில்லை.
ஆனால், இதை அதோடு முடிக்க கூடாது, இது ‘பெயர்சென்ற’ வழக்காக மாறியது.
ஆனால், அந்த கடையின் உரிமையாளர் பெயரும் கவுதம் கம்பிர் தான், இதனால் தான் அவரின் பெயரை பயன் படுத்துவதாக கூறினார்.
இதனால், இந்த வழக்கு திரும்பி விட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கம்பிர், இந்த சீசனிலும் சிறப்பாக விளையாடினார். அந்த அணியின் சிறப்பான செயலால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், தகுதி சுற்று இரண்டில் மும்பை அணியிடம் தோற்றது.
இதனால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்க பட்டது. ஆனால், அவரது ராசி, அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க வில்லை.