3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர். ஸ்டீவ் ஸ்மித்(131), புகோவ்ஸ்கி (62) மற்றும் லாபுசாக்னே (91) ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதில் ஸ்மித் 81, மார்னஸ் 73 மற்றும் கிரீன் 84 ரன்களைக் குவித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இன்று நடைபெற்ற இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விஹாரி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சிறப்பான முடிவை கொடுத்தனர்.
இதில் விஹாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஸ்வினும் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்களை குவித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி புஜாரா,ரிஷப் பந்த் மற்றும் அஸ்வின் குறித்து பாராட்டிப் டிவிட் செய்துள்ளார்.
இது குறித்து டிவிட் செய்த கங்குலி “இந்திய அணி சிறப்பாக விளையாடியது. தற்போது தொடரை வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது. புஜாரா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோரின் முக்கியத்துவத்தை தற்போது அனைவரும் தற்போது உணர்ந்து இருப்பீர்கள். உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு மூன்றாவதாக களமிறங்கிய சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதில்லை என்று புஜாராவையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமில்லை என்று அஸ்வினையும்” குறித்து ட்வீட் செய்திருக்கிறார் சவுரவ் கங்குலி.
Hope all of us realise the importance of pujara,pant and Ashwin in cricket teams..batting at 3 in test cricket against quality bowling is not always hitting through the line ..almost 400 test wickets don't come just like that..well fought india..time to win the series @bcci
— Sourav Ganguly (@SGanguly99) January 11, 2021