Cricket, India, Australia, Ajinkya Rahane, Sunil Gavaskar

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய ரகானே புறக்கணிக்கப்பட்டது சரியல்ல என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து 4 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய துவக்க வீரர் ரகானே புறக்கணிக்கப்பட்டார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்,’ ரகானேவை டி-20 தொடரில் புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் கூட ராகுல் விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என நான் சொல்லவில்லை. நல்ல பார்மில் உள்ள ரகானேவை புறக்கணித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ‘ என்றார்.

இந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, எம்.ஸ். தோனி, கேதார் ஜாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்த்ர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ஜேஸ்ப்ரிட் பும்ரா.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *