தோனி, கோலி, ரோஹித்துடன் விளையாடியது நன்றாக இருந்தது: விஜய் சங்கர்!! 1

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விளையாடும்போது தோனியைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன் என ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று வரலாறு படைத்தது. அதேபோல், 10 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.தோனி, கோலி, ரோஹித்துடன் விளையாடியது நன்றாக இருந்தது: விஜய் சங்கர்!! 2  குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விஜய் சங்கர் 43 ரன்களை விளாசி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.டி-20 தொடரைப் பொறுத்தவரை இவருக்கு பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு நாள் தொடர்களில் சில ஓவர்களை வீசியிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் கிடைத்த அனுபவங்களை விஜய் சங்கர் பகிர்ந்துகொண்டார். அதில், “மூத்த வீரர்களுடன் விளையாடிபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். போட்டியில் சேஸிங் செய்யும்போது தோனியைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார்.   நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி அவர், வரும் 24-ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள அவர், அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.தோனி, கோலி, ரோஹித்துடன் விளையாடியது நன்றாக இருந்தது: விஜய் சங்கர்!! 3

இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோலி, ரோகித் சர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.தோனி, கோலி, ரோஹித்துடன் விளையாடியது நன்றாக இருந்தது: விஜய் சங்கர்!! 4

என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்திருக்கனும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பிவேன். அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும்.

என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விஷயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *