மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி மட்டும் 200 ரன்கள் குவித்திருந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்திருக்கும் என்று இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர்.
இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதில் கிராலி அடித்த 53 ரன்கள் தான் அதிகபட்சமாக இருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 99 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்றை இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 46 ரன்கள் குவிப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இந்திய அணி மொத்தமாக 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது. இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் ரோகித் சர்மா 25 ரன்களும் சுப்மன் கில் 15 ரன்களும் குவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் குறித்து இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங் “மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி மட்டும் 200 ரன்கள் குவித்திருந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்திருக்கும். இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. ஆனா இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு சரிப்பட்டு வராது” என்று கூறியுள்ளார். இவரது கருத்து பலரது கவனித்தை ஈர்த்துள்ளது.