தேர்வு குழு மீதி கோவத்தில் ஹர்பாஜன் சிங் 1

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இந்தணியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இடம் பெறவில்லை. இதனால் தேர்வாளர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதற்கு தேர்வு குழு தலைவர் பிரசாத் யுவராஜ் விழக்கப்படவில்லை ஓய்வு தான் அளிக்கப்பட்டது என்று கூறி சமாளித்துவிட்டார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இதுவரை இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் கைகொடுத்த அளவிற்கு அவரது தலைமுறை வீரர்களில் யாரும் கைகொடுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு வீரரை இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தேர்வுக்குழுவினர் ஒரு வேளை அவருக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டிருக்கலாம்.

இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டில் இந்திய அணி எத்தனை சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் இந்திய அணிக்கு இனி யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் கிடைக்கபோவதில்லை என்று கூறியுள்ளார்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *