ரிஷப் பண்ட்
ஒரு தடவனா பரவாயில்ல… ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரே தப்பு; ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்

தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பண்ட்டை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்திய அணி

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஒரு தடவனா பரவாயில்ல... ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரே தப்பு; ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 1

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி.20 தொடரை கைப்பற்றியது.

ஒரு தடவனா பரவாயில்ல... ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரே தப்பு; ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !! 2

இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், இந்த தொடரில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் அவர் மீது கடும் விமர்ச்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பண்ட்டை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கில், பண்ட்

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃபும், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதை ரிஷப் பண்ட் வாடிக்கையாக வைத்து வருகிறார். நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டியில் அடித்த அதே தவறான ஷாட்டை அடித்தே அவர் மூன்றாவது போட்டியிலும் விக்கெட்டை இழந்தார். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வது ஏற்புடையது அல்ல. ரிஷப் பண்ட் தனது தவறுகளை விரைவாக திருத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *