கே.எல் ராகுலின் பார்ம் பிரச்சனை இல்லை: ராகுல் டிராவிட்!! 1

கேஎல் ராகுல் பார்ம் தற்போது பிரச்சனை இல்லை என அவரது ஆசான் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

கேஎல் ராகுல் அனைத்து விதமான போட்டிகளிலும் சதம் அடித்து இருக்கிறார் . நிறைய பேட்ஸ்மேன்கள் இதனை செய்ததில்லை. அவருடைய திறமை பற்றியும் பேச்சு இல்லை அவர்கள் மீண்டு வருவார் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று இந்திய ‘ஏ’ அணி பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.கே.எல் ராகுலின் பார்ம் பிரச்சனை இல்லை: ராகுல் டிராவிட்!! 2

1999 உலகக்கோப்பையில் 461 ரன்கள் குவித்து முதல் இடம் பிடித்த ராகுல் டிராவிட், இதுகுறித்து கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அடுத்த சில மாதங்களில் உச்சத்தை அடைவோம் என நம்புகிறேன்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை 2019 தொடருடன் ஒப்பிடக்கூடாது. இங்கிலாந்தில் ஆடுகளங்கள் மிகவும்‘பிளாட்’டாக இருக்கும். இது மிகவும் அதிக ரன்கள் குவித்த உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடும்போது தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு உலகக்கோப்பையை காட்டிலும் போர்டில் அதிக ரன்கள் வரும். 1999-ல் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டு கூக்கப்புரா பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பீல்டிங் கட்டுப்பாடுகள் மாறுபட்டுள்ளது. ஆகையால் இரண்டு உலகக்கோப்பையையும் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடாது’’ என்றார்.

கே.எல் ராகுலின் பார்ம் பிரச்சனை இல்லை: ராகுல் டிராவிட்!! 3

இந்நிலையில் இந்திய அணிக்கு தரமான வீரர்கள் பற்றி கவலையில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நான் முடிந்த வரை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆசைப்படுவேன். ஏனென்றால், வருங்கால இந்திய கிரிக்கெட் வீரர்கள் அங்குதான் ஒளிந்து கிடக்கிறார்கள்.

நமது உளளூர் கிரிக்கெட்  மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு வருடமும் நாங்கள் சிறந்த திறமையுடைய வீரர்கள் பார்த்து வருகிறோம். அவர்களை நானும், எனது குழுவில் உள்ளவர்களும் தவறவிட விரும்பமாட்டோம். நாங்கள் பார்த்த போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு ஒன்றன்பின் ஒன்று என்ற அடிப்படையில் தயார் செய்து வைப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *