நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 1

முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பேன் என அனைவரிடமும் கூறிவிட்டு வந்தே முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 2

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 3

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 4

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 5

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ள இஷான் இஷன், அனைவரிடமும் சொல்லிவிட்டு வந்து தான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஷான் கிஷன் பேசுகையில், “டிரசிங் ரூமில் அனைவரிடமும் நான் சொல்லிவிட்டு தான் வந்தேன். எப்படிப்பட்ட பந்துவீசப்பட்டாலும், எந்த திசையில் வீசப்பட்டாலும் நான் முதல் பந்தில் சிக்ஸர் தான் அடிப்பேன் என சொல்லிவிட்டு தான், இது அனைவருக்கும் தெரியும். ஆடுகளங்கம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. எனது பிறந்தநாள், எனது முதல் ஒருநாள் போட்டியை மேலும் சிறப்பாக்கவே முதல் பந்தில் சிக்ஸரும் அடித்தேன்” என்று தெரிவித்தார்.

நான் சொன்னா செய்வேன்…. சொன்னதை அப்படியே செய்து காட்டிய இஷான் கிஷன் !! 6

நேற்றைய போட்டியின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் கால் பதித்த இஷான் கிஷன், சிக்ஸருடன் தனது ரன் வேட்டையை துவங்கி அரைசதமும் அடித்ததன் மூலம், பல்வேறு பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *