நான் அடுத்த தோனியா..? வெளிப்படையாக பேசியுள்ளார் சஞ்சு சாம்சன் !! 1

நான் அடுத்த தோனியா..? வெளிப்படையாக பேசியுள்ளார் சஞ்சு சாம்சன்

தன்னை அடுத்த தோனியாக நினைப்பது இல்லை என இளம் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அனுபவ வீரர்களை விட இளம் வீரர்களே பட்டையை கிளப்பி வருகின்றனர்.

பஞ்சாப் அணியில் ராகுல், மயன்க் அகர்வால், மும்பை அணியில் இசான் கிஷான், கொல்கத்தா அணியில் சுப்மன் கில், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் என அனைத்து அணியிலும் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நான் அடுத்த தோனியா..? வெளிப்படையாக பேசியுள்ளார் சஞ்சு சாம்சன் !! 2

இதில் மற்ற வீரர்களை விட ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீது அதிக கவனம் பெற்று வருகிறது. தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய சஞ்சு சாம்சனுக்கு தினம் தினம் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

 

விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தான் அடுத்த தோனி என்றும் சிலர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், தான் அப்படி நினைக்கவில்லை என்று சஞ்சு சாம்சனே தெரிவித்துள்ளார்.

நான் அடுத்த தோனியா..? வெளிப்படையாக பேசியுள்ளார் சஞ்சு சாம்சன் !! 3

இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், “தோனி என்பது ஒருவர் தான். அவரது இடத்திற்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அனைவருக்கும் நான் சொல்லும் அறிவுரை ஒன்று தான் யாரும் தோனியை போன்று விளையாடி தோனியாக மாற முயற்சிக்க வேண்டாம். நானும் என்னை அடுத்த தோனியாக நினைக்கவும் இல்லை, தோனியாக மாற வேண்டும் என்று முயற்சிப்பதும் இல்லை. சஞ்சு சாம்சனால் என்ன முடியும் அதை எப்படி சரியாக செய்ய முடியும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *