தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியுடன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது இந்தியா.
இதனால், இந்திய ரசிகர்கள் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர், இந்நிலையில் இன்னொரு நற்செய்தியும் வந்துள்ளது. இந்த சாம்பியன்ஸ்ட் டிராபி தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு பயணம் செய்கிறது இந்தியா. இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பயிற்சியாளராக அணில் கும்ப்ளே இருப்பார் என சி.ஓ.எ. தலைவர் வினோத் ராய் கூறினார்.
சிறிது நாளுக்கு முன்பு எதிர்காலத்தில் இந்திய அணியின் பற்சியாளராக இருப்பாரா என சந்தேகங்கள் எழுந்தது. அதன் பிறகு, இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கும் மோதல் என வதந்தி கிளம்பியது. ஆனால், இங்கிலாந்தில் உள்ள விராட் கோலி மோதல் ஏதும் இல்லை என்று உறுதி படுத்தினார்.
கடந்த ஆண்டு பயிற்சியாளராக பதவி ஏற்கப்படும் போது, சாம்பியன்ஸ் டிராபி 2017 வரைக்கும் தான் அவருடைய பதவி நீடிக்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய பதவியை வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தொடங்கினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா, 2-0 என்னும் கணக்கில் தொடரை வென்று அசத்தியது இந்தியா.
“சாம்பியன்ஸ் டிராபி இன்னும் விளையாடுகிறார்கள், இதனால் தற்போது பயிற்சியாளரை நியமிக்க முடியாது என பிசிசிஐ தலைவர் சி.கே. கண்ணா பரிந்துரைத்தார். சாம்பியன்ஸ் டிராபி 18ஆம் தேதி முடிகிறது, இந்நிலையில் ஜூன் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு பயணிக்கிறது இந்தியா,” என தகவல் வந்தது.
எட்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.