பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா... பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !! 1
பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா… பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு

இலங்கை அணியுடனான பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாபர் அசாமின் மோசமான கேப்டன்சியே காரணம் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா... பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !! 2

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகளில் பாகிஸ்தான் அணியே முதன்மையானதாக பார்க்கப்பட்டது. பந்துவீச்சில் மற்ற அணிகளை விட பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் அணியே பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என பலரும் கருதினர். ஆனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி இதன் மூலம் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்திய அணிக்கு எதிரான இந்த படுதோல்வியின் மூலம், இலங்கை அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையை பாகிஸ்தான் அணி சந்தித்தது.

பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா... பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !! 3

இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, பந்துவீச்சில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டு போட்டியை கடைசி பந்து வரை எடுத்து சென்றாலும், இலங்கை வீரரான அஸலன்காவின் பொறுப்பான பேட்டிங்கின் மூலமும், பாபர் அசாமின் மோசமான கேப்டன்சி மூலமும் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஆசிய கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.

பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா... பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !! 4

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளதால்  முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாபர் அசாமின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள குத்தம் சொல்லாதீங்கடா... பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு இவர் தான் முழு காரணம்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !! 5

 

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. ஜமான் கானின் ஓவரின் போது மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி சென்றது, அதன்பின் ஷாகின் அப்ரிடி ஓவரில் அதே திசையில் ஒரு பவுண்டரி சென்றது, இரண்டு பவுண்டரிகளுமே slow பந்துகளில் அடிக்கப்பட்டது. slow பந்துகளை வீசுவது தான் திட்டம் என்றால் நிச்சயமாக மிட் ஆஃபில், லாங் ஆஃபிலும் ஒரு வீரரை பீல்டிங்கிற்கு நிறுத்தியிருக்க வேண்டும், இது மிகவும் சாதரண விசயம் தான், ஆனால் அதை கூட பாபர் அசாம் சரியாக செய்யவில்லை. கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை இலங்கை அணிக்கு இருந்திருந்தால் இலங்கை அணிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *