இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற சுற்றுப்பயணத் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் என மூன்று பார்மட்களையும் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற இருக்கிறது. இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் பிறகு இந்திய அணி சில டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத் தொடரில் விளையாட இருக்கிறது. இதெல்லாம் நடைபெற்று முடிந்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த டி20 உலக கோப்பை தொடர் ஏழாவது டி20 உலக கோப்பை தொடராகும்.
இதற்காக தற்போதிலிருந்தே அனைத்து அணிகளும் தயாராகிவருகிறது. குறிப்பாக இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சிறந்த வீரர்களை கண்டறிந்து வருகிறது. ஆனால் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன் மிகப்பெரிய மூன்று பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணி ஸ்பின், ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர் இதில் தீவிரம் காட்ட வேண்டும்.
ஸ்பின் பவுலர்கள் :
சமீபகாலமாக சொதப்பி வரும் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் தன்னை நிரூபித்தால் அணியில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவார்கள். இதுவும் இல்லை என்றால் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இவர்களில் ஒருவர் கண்டிப்பாக ஸ்பின் ஆல்ரவுண்டராக தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள்:
தொடக்க வீரர்கள் பொருத்தவரை இந்திய அணியில் ரோகித் சர்மா எப்போதும் களமிறங்குவார். ஆனால் அவருக்கு ஜோடியாக யாரு களமிறங்க போகிறார்கள் என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் ஷிகர் தவான் மற்றும் கே எல் ராகுல் இருவரும் சிறந்த தொடக்கத்தை கொடுக்க தவறி விட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் விராட் கோலியை தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார். அப்போது இவர்கள் இருவரும் இணைந்து 90 ரன்கள் குவித்தனர். எனவே டி20 உலக கோப்பை தொடருக்கு முன் சிறந்த தொடக்க வீரரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும்.
மிடில் ஆர்டர் :
மிடில் ஆர்டரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களில் தேர்வு செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் இவர்களை எந்த இடத்தில் களம் இறக்குவது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் எந்த இடத்தில் களம் இறங்கினால் இந்த வீரராக சிறப்பாக விளையாடுவார் என்பதை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும்.