தோனியை நாங்கள் சென்னை அணியில் தக்க வைத்து கொள்ளுவோம் : சென்னை அணியின் தலைவர் 1

எங்கள் அணியின் ஒரு வீரரை மட்டும் தக்க வைத்து கொள்ளலாம் என்று ஒரு வலி இருந்தால் நாங்கள் கண்டிப்பாக தோனியை தான் எங்கள் அணியில் முதலில் தக்க வைத்து கொள்ளுவோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் கூறியுள்ளார்.

சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஈடுப்பட்டதாக இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது, இதனால் இந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படவில்லை.

இந்த இரண்டு ஆண்டு தடை காலத்தில் தோனி புனே அணியில் விளையாடினார், புனே அணி இரண்டு முறையும் கோப்பையை தவற விட்டது. சென்னை அணியில் உள்ள மற்ற வீரர்களான ரெய்னா,ஜடேஜா ஆகியோர் குஜராத் அணியில் விளையாடி வந்தார்கள். குஜராத் அணியும் இரண்டு முறையும் ஐபிஎல் கோப்பையை தவற விட்டது.

தற்போது தடைவிதிக்க பட்ட இரண்டு ஆண்டுகாலம் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் 2018ஆம் ஆண்டில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளது.

தோனியை நாங்கள் சென்னை அணியில் தக்க வைத்து கொள்ளுவோம் : சென்னை அணியின் தலைவர் 2

சென்னை அணி கூறியது :

“வரும் ஐபிஎல் போட்டிகளில் அணிக்கு ஒரு வீரரை தக்க வைத்து கொள்ளலாம் என கூறினால் நாங்கள் கண்டிப்பாக தோனியை தான் எங்கள் அணியில் தக்க வைத்து கொள்ளுவோம். இது குறித்து நாங்கள் இன்னும் தோனியிடம் எதுவும் ஆலோசனை நடத்தவில்லை. விரைவில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர்கள் தோனியை சந்தித்து பேச உள்ளோம்”

“எங்களுக்கு, விசுவாசம் மிகவும் முக்கியம். இது தான் எங்கள் அணிக்கு இவ்வளவு ஆண்டுகளில் பெரிய பலமாக உள்ளது, நாங்கள் இன்னும் உதவி ஊழியர்களிடம் இறுதி முடிவை எடுத்திருக்கவில்லை என்றாலும், பழைய ஆதரவு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது பற்றி நாங்கள் நிச்சயமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தோனியை நாங்கள் சென்னை அணியில் தக்க வைத்து கொள்ளுவோம் : சென்னை அணியின் தலைவர் 3

வெள்ளியன்று (ஜூலை 14) தொடங்கி சமூக ஊடகங்களில் இரண்டு செயல்களோடு தொடங்கும் என்று உரிமையாளர் விளம்பர திட்டங்களை ஜான் மேலும் வெளிப்படுத்தினார்.

இது ஒரு புதிய தொடக்கமாகும். நாங்கள் திரும்பி செல்ல விரும்பவில்லை. எங்கள் பேரார்வம் கிரிக்கெட் மற்றும் நாம் அதை ஒட்டி இருப்போம். வெள்ளிக்கிழமை, சமூக மீடியாவில் இரண்டு நடவடிக்கைகளை நாங்கள் அணிக்கு திரும்புவோம்.

ஏதுவாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *