இவர பார்த்து தான் எல்லாரும் நடுங்குவாங்க... நீங்க எடுக்காம விட்றாதீங்க; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 1
இவர பார்த்து தான் எல்லாரும் நடுங்குவாங்க… நீங்க எடுக்காம விட்றாதீங்க; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரண்டு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் குறிப்பாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இவர பார்த்து தான் எல்லாரும் நடுங்குவாங்க... நீங்க எடுக்காம விட்றாதீங்க; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் அசுரபலத்துடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் பலர் தற்போது மிக சிறப்பான பார்மில் இருப்பதால், இரு அணிகள் இடையேயான எதிர்வரும் டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இவர பார்த்து தான் எல்லாரும் நடுங்குவாங்க... நீங்க எடுக்காம விட்றாதீங்க; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்தே பேசி வருவதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சூர்யகுமார் யாதவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவர பார்த்து தான் எல்லாரும் நடுங்குவாங்க... நீங்க எடுக்காம விட்றாதீங்க; இந்திய அணிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 4

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ரன் குவிப்பதும் அவசியமானது. மிடில் ஆர்டர் வீரர்கள் வேகமாக ரன் குவித்து கொடுத்தால் அது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கும் வலு சேர்க்கும், எதிரணிக்கும் அதிக நெருக்கடியை கொடுக்கும். அதிவேகமாக 30, 40 ரன்கள் எடுப்பது கூட போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தலாம், அதற்கு சூர்யகுமார் யாதவை போன்ற ஒருவர் இருப்பது அவசியம். அனைத்து போட்டியிலும் தடுப்பாட்டம் கை கொடுக்காது” என்று தெரிவித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *